பெரியாரியல் பயிற்சி வகுப்பு, தெருமுனைக் கூட்டங்கள்

1 Min Read

குடந்தை ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு

மருதாநல்லூர், ஜூலை 6- குடந்தை ஒன்றிய திராவி டர் கழக கலந்துரையாடல் கூட்டம் மருதாநல்லூர் கோவி.மகாலிங்கத்தின் பெரியார் உணவகத்தில்  30.6.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடை பெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மருதாநல் லூர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். 

குடந்தை மாநகர மகளிர் அணி செயலாளர் மு.அம்பிகா, மாநகர செயலாளர் வழக்குரை ஞர் பீ.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினர்.

திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய கழக செய லாளர் அ.சங்கர், மாவட்ட மகளிர் அணி தலைவர் எம்.திரிபுரசுந்தரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பொறியா ளர் க.சிவகுமார், மாண வர் கழகத் புதிய தோழர் செந்தமிழன், மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு. துரைராசு, மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி ஆகியோர் கூட்டத்தின் நோக்கங் களை செயல்படுத்துவது குறித்து உரையாற்றினர்.

கூட்டத்தின் நோக்கங் களைப் பற்றியும், கடந்த பொதுக் குழுவின் தீர்மா னங்கள், விடுதலை சந்தா புதுப்பிப்பு மற்றும் புதிய சந்தா சேர்த்தல், ஒவ் வொரு ஒன்றியத்திலும் பயிற்சி வகுப்பு நடத்து வது, புதிய கிளைக் கழ கங்கள் உருவாக்குவது, வைக்கம் போராட்டம் விளக்க தெருமுனைப் பிரச்சாரம் போன்ற தீர் மானங்களை விளக்கி தலைமைக் கழக அமைப் பாளர் குடந்தை க.குரு சாமி கருத்துரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *