மனோன்மணியம் சுந்தரனார் 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தார். தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீதான அவரது ஆர்வம் மற்றும் பங்களிப்பு இன்றளவும் அவரது புகழைச் சொல்கிறது.
அவரது புகழ்பெற்ற படைப்பு “மனோன்மணியம்” நாடகம். தமிழ் நாடக வரலாற்றில் மைல்கல்லாகும்.
அவரது புகழ்பெற்ற பாடல் “நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தப் பாடல் இன்று அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்வுகளிலும் பாடப்படுகிறது. இது அவரது தமிழ் மீதான அன்பு மற்றும் பங்களிப்பின் அடையாளமாகும்.
மனோன்மணியம் சுந்தரனார் தமிழ் இலக்கிய வரலாற்றில் கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு மற்றும் தமிழ்நாடகத் துறையில் முன்னோடியாக விளங்கியவர். அவரது படைப்புகள் மற்றும் ஆய்வுகள் தமிழ் மொழியின் செழுமையை உலகிற்கு உணர்த்தியுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அவரது பெயரால் துவங்கப்பட்டது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
விவேகானந்தர் 1892 இல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைக்கு, விவேகானந்தரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவனந்தபுரத்தில் விவேகானந்தர் தங்கியிருந்த நாட்களில் ஒருநாள், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் விருந்தினராக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். விருந்திற்குப் பிறகு விவேகானந்தரும், சுந்தரம் பிள்ளை அவர்களும் மகிழ்வோடு உரையாடிக் கொண்டிருந்தபோது,
எதிர்பாராத விதமாக விவேகானந்தர் சுந்தரம் பிள்ளையைப் பார்த்து, ‘தங்கள் கோத்திரம் என்ன?’ என்று கேட்டார். சுந்தரம் பிள்ளை ஒரு நிமிடம் மவுனமானார். பின் நிகழ்ந்தவற்றைத் தன் குறிப்புப் புத்தகத்தில் சுந்தரம் பிள்ளை அவர்களே எழுதியுள்ளார்.
“விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில், வினாவினைக் கேட்டதும் நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், எனக்கும் கோத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான், என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.”
தான் ஹிந்து அல்ல என்றும் திராவிடன் என்பதை விவேகானந்தரிடம் பேராசிரியர் ஆணித்தரமாக கூறியதை கே.சுந்தர்ராம் எழுதிய கட்டுரை மூலம் விளக்குகிறது Reminiscences of Swami Vivekananda எனும் இன்னொரு நூல்.அந்தக் கட்டுரையில் உள்ள சிறு பகுதி இது;
One remark of Professor Sundaram Pillai — that, as a Dravidian, he considered himself entirely outside the Hindu polity — put him somewhat out of court with the Swami, who, later on, remarked
of him that eminent as he was as a scholar, he had thoughtlessly given himself away to the sway of race prejudice, which already during his travels the Swami had noted as an unpleasant characteristic of certain South Indian minds of the unbalanced or mediocre type.
-“Reminiscences of Swami Vivekananda” -3rd edition 1983