தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

1 Min Read

சென்னை, ஏப்.3 தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டுமென அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், “கடந்த மார்ச் 22, 2025 அன்று, சென்னையில் ‘Fair Delimitation’ குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டம் நடைபெற்றது. இது இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியத் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம். கூட்டத்தில் எங்கள் ஆலோசனை மூலம் எழும் குரல்கள் அரசியலை கடந்து, நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நியாயமான பிரதிநிதித்துவத்தை நாடும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடிமக்களின் கவலைகளை பற்றியது.

எனவே, இந்த விவகாரம் நமது மாநிலங்களுக்கும், குடிமக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்ப தால், கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் மனுவை முறையாக சமர்ப்பிக்க உங்களுடனான சந்திப்பு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். விரைவில் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *