கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

3.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை ஒன்றிய அரசு மீட்க வேண்டும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
* தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் கடிதம்.
* வக்ஃபு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* தெலங்கானா அரசு நிறைவேற்றிய பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத மசோதா: ஒன்றிய அரசு ஒப்புதல் கோரி டில்லியில் ஆர்ப்பாட்டம். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த், மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப் போடுவதாக, ஒன்றிய அரசு மீது புகார்.
* வக்ஃபு மசோதா கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் நிறைவேற்றம். விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; வக்பு திருத்த மசோதா இந்தியாவை பிளவுபடுத்தும்; மதத்திற்கு சம்பந்தம் இல்லை என அரசு பதில்; காரசாரமான விவாதம் இரவு வரை நீடித்தது.
தி இந்து
* பிற மொழி ஆசிரியர்கள் இல்லை என்ற காரணம் கூறி, மூன்றாம் மொழியாக, தென் மாநிலங்களில் ஹிந்தியும், வட மாநிலங்களில் சமஸ்கிருதமும் கற்பிக்கப்படுவதாக அரசின் தகவலைச் சுட்டிக்காட்டி கட்டுரை.
* வக்பு (திருத்த) மசோதாவில் முஸ்லிம் அல்லாதவர்களை வக்ஃப் வாரியங்களில் ஒரு பகுதியாக அனுமதிக்கும் சரத்துக்கு பெரும்பான்மையான முஸ்லிம் எம்.பி.க்கள் எதிர்ப்பு.
தி டெலிகிராப்
* இந்திய பொருட்கள் மீது 26 சதவீத வரி விதித்தார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்.
* உயர் கல்வியின் தரம் நீர்த்துப்போகும் என்ற எதிர்க்கட்சிகளின் அச்சத்திற்கு மத்தியில், கல்வித்துறை சாராத நபர்களை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நியமிக்க அனுமதிக்கும் திட்டத்திற்கு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆதரவு.
டைம்ஸ் ஆப் இந்தியா
* திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம்; தொண்டர்களுக்கு ஆ.ராசா, எம்.பி. அறிவுரை; அது அவரது சொந்தக் கருத்து என அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *