இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கம் இருப்பு 25 ஆயிரம் டன் வங்கிகளில் உள்ளதை விட அதிகம்

1 Min Read

புதுடில்லி, ஏப்.1- தங்கத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு, புதுப்புது உயரங்களை எட்டி வருகிறது.

உலகிலேயே அதிக தங்கம் இருப்புகளை கொண்ட ‘டாப் 10′ மத்திய வங்கிகளை காட்டிலும், இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கம் இருப்பு அதிகம் என, எச்.எஸ்.பி.சி., நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்திய குடும்பங்களின் தங்கம் இருப்பு

இந்திய குடும்பங்களின் தங்கம் இருப்பு 25,000 டன். இது அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு, ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, இந்தியா, ஜப்பான், துருக்கி ஆகிய 10 நாடுகளுடைய மத்திய வங்கிகளின் இருப்பை காட்டிலும் அதிகமாகும்.

இவற்றில் அதிக பட்சமாக அமெரிக்க மத்திய வங்கியிடம் 8,133 டன் தங்கம் இருப்பு உள்ளது. இதற்கு அடுத்த படியாக ஜெர்மனி மத்திய வங்கியிடம் 3,300 டன் இருப்பு உள்ளது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் தங்கம் இருப்பு 876.18 டன்னாக உள்ளது.
புவிசார் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.

கடந்த 2022 முதல், தொடர்ந்து மூன்று ஆண்டு களாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் இருப்பு 1,000 டன்னுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
நிச்சயமற்ற சூழலில் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுவதால், தங்கம்த்தின் மீதான வங்கிகளின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த 1990களுக்குப் பின், ரிசர்வ் வங்கி கடந்தாண்டு முதல் முறையாக இங்கிலாந்தில் இருந்து 100 டன்னுக்கும் கூடுதலான தங்கம்த்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
2024 டிசம்பர்

நிலவரம்

மத்திய வங்கிகளில் தங்கம் இருப்பு (டன்களில்). அமெரிக்கா 8,133, ஜெர்மனி 3,300, இத்தாலி 2,452, பிரான்சு 2,437, ரஷ்யா 2,332, சீனா 2,280, சுவிட்சர்லாந்து 1,040, இந்தியா 876, ஜப்பான் 846, துருக்கி 615, மொத்தம் 24,311.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *