புதுச்சேரி, ஏப். 1- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 28.3.2025 மாலை 6:30 மணியளவில் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் கழகத் தலைவர் வே. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் கழகச் செயலாளர் தி.இராசா கடவுள் மறுப்பு உறுதி மொழியினை வாசித்து, அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
முன்னிலை வகித்த பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்பாளர் கு. இரஞ்சித் குமார், மாவட்டத் கழகக் காப்பாளர் இர. இராசு, பொதுக்குழு உறுப்பினர் லோ. பழனி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், துணைத் தலைவர் மு. குப்புசாமி, இளைஞரணிச் செயலாளர் ச. பிரபஞ்சன், தொழிலாளரணிச் செயலாளர் கே. குமார் நகராட்சி பொறுப்பாளர்கள் களஞ்சியம் வெங்கடேசன்,எஸ்.கிருஷ்ணசாமி, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி நோக்கவுரையாக இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டியதின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.
நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கழக வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
புதுச்சேரியில் கழகப் பிரச்சாரம் வெகு மக்களை ஈர்க்கும் வகையில் ஒன்றிய பி.ஜே.பி அரசுக்கு எதிராகவும் ஹிந்துத்துவா, ஸநாதன சக்திகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும்.
இளைஞர்கள், மாணவர்களை ஈர்க்கும் வகையில் திராவிடர் இயக்கக் கொள்கைகளை எடுத்துச் சொல்லி புதிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
நாம் ஏன் மோடியை எதிர்க்கிறோம், நீட் தேர்வு கொண்டு வந்ததையும், சமஸ்கிருதம், ஹிந்தி திணிப்புக்கு எதிராக, புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் பழைய குலக்கல்வித் திட்டத்தை பாசிச அரசு நம் மீது திணிப்பது ஏன் ? என்பதையும் விளக்க வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள கழக அணிகள் ஒவ்வொரு மாதமும் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மார்டன் ரேசனாலிஸ்ட் இதழ்களுக்கு சந்தாக்களை அதிக அளவில் திரட்டித் தர வேண்டும்.
தமிழர் தலைவரின் கனவுத் திட்டமான சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு புதுச்சேரி கழகத் தோழர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மற்றும் ஒத்த கருத்துள்ள அமைப்புகள், அரசியல் கட்சிகளிடம் நிதி திரட்டி தர வேண்டும்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்களின் செயல்பாடுகளை அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
தமிழர் தலைவர் சொன்னது போல் இல்லம் தோறும் கழகக் கொடி ஏற்றுதல் கார்கள், இருசக்கர வாகனங்களில் கழகக் கொடியை பறக்கவிட்டு அதை ஒரு பிரச்சாரமாக ஆக்கவேண்டும் . மேலும் புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மலர வேண்டியும், புதுவைக்கு முழு மாநிலத் தகுதி கிடைக்கவும் திராவிடர் கழகம் முழுவீச்சில் பிரச்சாரம் செய்ய தேவையான உத்திகளை விரிவாக எடுத்துக்கூறி உரையாற்றினார்.
நிறைவாக விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் இரா.ஆதிநாராய ணன், இராம. சேகர், கா.நா.முத்துவேல், ஆ.குப்புசாமி, பெ.ஆதிநாராயணன், இரா.சத்தியராஜ், ஆர்.வெற்றிவேல்,கே.மாயக்கிருஷ்ணன், பி.மண்ணாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரங்கல் தீர்மானம்
புதுச்சேரி புதிய நீதிக் கட்சியின் தலைவர் பொன்னுரங்கம், திராவிடர் கழக இளைஞரணி மேனாள் தலைவர் முத்தமிழ் நகர் இராசா, நகராட்சி கழகப் பொறுப்பாளர் ஆறுமுகத்தின் இளைய மகன் ஆ.அன்பழகன் ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 16 ஆவது முறையாகத் தனி மாநிலத் தகுதி வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதனை இக்கூட்டம் வரவேற்கிறது. மேலும் இனியும் காலம் கடத்தாமல் ஒன்றிய அரசு உடனடியாக புதுவைக்கு தனி மாநிலத் தகுதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புதுச்சேரி அருகில் அமைந் துள்ள ஆரோவில் பன்னாட்டு நகர் பகுதியில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்தும், அப்பகுதியில் குறிப்பாக பாசிச, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஊடுருவல் நடவடிக்கைகள் அதனை தீவிரப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு நிதி உதவியுடன் நடைபெற்று வரும் பல்வேறு சீர்கேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இக்குழு கேட்டுக்கொள்கிறது.
இலஞ்சம் ஊழல் முறை கேட்டின் மொத்த உருவமான பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் அவலத்தை கண்டித்து புதுச்சேரியில் கூட்டு இயக்கங்கள் சார்பில் நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
புதுச்சேரியில் அண்மையில் சீர் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராஜீவ் காந்தி பொலிவுறு பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக திறக்குமாறு புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்கிறோம்.
சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது புதுச்சேரி முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது, புதிய கிளை கழகங்கள் உருவாக்குவது, விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு மற்றும் தி மார்டன் ரேசனாலிஸ்ட் இதழ்களுக்கு சந்தா சேர்ப்பது,
பெரியார் தொண்டர்களின் கனவுத் திட்டமான பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டும் பணியில் முழுவீச்சில் ஈடுபடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.