ஏடிஎம் சேவை கட்டணத்தை உயர்த்தி ஏழைகளை பாதிப்படைய செய்வதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

2 Min Read

சென்னை, மார்ச் 31- ஏடிஎம் சேவை கட்டண உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம் சேவை கட்டணம்
ஏடிஎம் மய்யங்களில் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை சேவை களுக்கான கட்டணங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி அல்லாமல் மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17இல் இருந்து ரூ.19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்மில் மாதம்தோறும் 5 முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். 5 முறைக்கு பிறகும் பணம் எடுத்தால், அதற்கான கட்டணம் ரூ.21இல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
முதலமைச்சர் கண்டனம்
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

‘அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள்’ என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள். அடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று கூறி அபராதம் விதித்தார்கள்.
தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவை தாண்டி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.23 வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனால் என்ன ஆகும். தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக, ஏழைகளுக்கும் வங்கி சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.

ஏற்கெனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலை திட்ட பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவன மயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏடிஎம் அட்டையை தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *