ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பொது சிவில் சட்டத்தை அவசரமாக நிறைவேற்று வதற்கு முன், அனைவருக்கும் முதலில் சமமான நீதி கிடைக்கட்டும் என்கிறது தலையங்க செய்தி.

* தகவல் பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்தை அறிந்து நிறைவேற்ற வேண்டும் என்கிறது இன்னொரு தலையங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஒன்றிய அரசை எதிர்ப்பவர்களை சிபிஅய், அமலாக்கத் துறை மூலம் மோடி அரசு மிரட்டி வருகிறது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்று வரையில் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்ற முன்வரவில்லை; அதற்கு நேர்மாறாக மக்கள் விரோத போக்கோடு மதத்தை, சனாதனத்தை இன்றைக்கு மக்களிடத்தில் திணித்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்.

* மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க அனுமதிக் காததால், நாடாளுமன்ற உள்துறை குழு கூட்டிய கூட்டத் தில் இருந்து திக் விஜய் சிங் உள்ளிட்ட சில எம்.பி.க்கள் வெளிநடப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* முந்தைய பாஜக ஆட்சியில் 40 சதவீதம் கமிஷன் பெற்ற ஊழல் விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட கருநாடக காங்கிரஸ் அரசு முடிவு.

தி இந்து:

* பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று யுஜிசியிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்.

* மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களுக்கான முன் மொழியப்பட்ட வெளியேறும் தேர்வை  (நெக்ஸ்ட்) மறுபரி சீலனை செய்ய இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை.

தி டெலிகிராப்:

* புனேவுக்கு அருகில் உள்ள தலேகானில் உள்ள டி.ஒய்.பாட்டீல் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, ஹர் ஹர் மகாதேவ் என கூச்சலிட்டு, சங் பரிவார் கும்பல், பள்ளியின் தலைமை ஆசிரியரை தாக்கினர்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *