புதுடில்லி, மார்ச் 28 மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தனக்கு மக்களவையில்பேச வாய்ப்பளிக்க மறுத்ததாக எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மக்களவை நடைமுறைகள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் நடைபெறுகிறது, முக்கியமான பிரச்சினைகளை பேச நான் பலமுறை வாய்ப்பு கேட்டும் அவை மறுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
“இங்கே என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பேச அனுதிக்குமாறு நான் அவருக்கு கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர் மக்கள வைத் தலைவர் வெளியேறிச் சென்றுவிட்டார். அவையை நடத்துவதற்கான வழி இது இல்லை. மக்களவைத் தலைவர் என்னைப் பேச விடாமல் இருப்ப தற்காக அவையில் இருந்து வெளி யேறிவிட்டார். அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற புகாரை கூறி அவையை ஒத்தி வைத்தார். அதற்கான அவசியம் இல்லை.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிப்பது மரபு. நான் பேச எழும்போது எல்லாம், பேச விடாமல் தடுக்கப் பட்டேன்.
அப்போது நான் எதுவும் செய்யவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தேன். இங்கு ஜனநாயகத்துக்கே இடம் இல்லை. அப்போது நான் மகா கும்பமேளா பற்றி பேச விரும்பினேன், அதேபோல் வேலை வாய்ப்பின்மை பற்றியும் பேச விரும்பினேன். ஆனால் எனக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.