ஆளுநர் கூற்று உண்மையா? தமிழ்நாடு அரசின் கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை கொடுத்த ஒப்புகை சீட்டு வெளியீடு!

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 8 – அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர். விஜய பாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர் மாளி கைக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. அதை பெற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை அதிகாரிகள், அதற்கு வழங் கிய ஒப்புகை சீட்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேனாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென கடந்த செப்டம்பரில் ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக நேற்று முன்தினம் (6.7.2023) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தெரிவித்தார். இதையடுத்து நேற்று முன்தினம், ஒருசில வழக்குகளுக்கு சட்ட விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் மேனாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் எம். ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்பான எந்தவித கோப்புகளும் ராஜ்பவனுக்கு வரவில்லை எனவும் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பாக ஒப்புகை சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், கடந்த 2022 செப்டம்பர் 12 ஆம் தேதி அனுப்பப்பட்ட கோப்பை பெற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை ஒப்புகைசீட்டு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல் ‘மே மாதம் அனுப்பிய நினைவூட்டல் கடிதத்தையும் நாங்கள் பெற்றுக் கொண்டோம்’ என ஆளுநர் மாளிகை ஒப்புகை சீட்டு வழங்கியுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் இந்தக் கடிதங்கள்தான் வரவில்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அதை ஆளுநர் மாளிகை பெற்றதாக வழங்கிய ஒப்புகைச் சீட்டு வெளியாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *