ஆவடி மாவட்ட கழகத் துணைத் தலைவர் மு.இரகுபதி-ராணி இணையரின் வாழ்விணையேற்பு 52ஆம் ஆண்டு மணவிழா நாளை (11.3.2025) முன்னிட்டு ‘விடுதலை’ மற்றும் ‘உண்மை’ ஏடுகளுக்கு ஆண்டு சந்தாவிற்கு உரிய தொகையான ரூ.2,900த்தை ஆவடி மாவட்ட கழக துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராசு ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர்.