தி.மு.க. அரசின் தரம் எத்தகையது என்பதற்கு இதுவே சாட்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவு

1 Min Read

கலைஞரின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்றும் சிறப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன

சென்னை, மார்ச் 23- சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார்.
கடந்த சில நாட்களாக நடந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தனது உரையில் அவர் விரிவாக பதில் அளித்தார்.

நிதிநிலை அறிக்கை மீதான அமைச்சர் தங்கம் தென்னரசின் பதில் உரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
2 ஆயிரம் கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான மடிக்கணினி வழங்கிட முடியுமா? எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் தி.மு.க. அரசின் தரம் பற்றி யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத ஆல் ரவுண்ட் தமிழ்நாடு பட்ஜெட்-2025 அளித்து, பதிலுரையிலும் 100-100 வாங்கியிருக்கும் நிதி அமைச்சருக்குப் பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *