திருச்சி, நவ. 27 திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல் பிளாசா அருகே தனியார் கல்லூரி பகுதியில் நேற்று சமயபுரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், சமயபுரத்தைச் சேர்ந்த முரளி, இவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்ததுடன் அவர் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
