மும்மொழிக் கொள்கையால் ஏற்பட்ட கேடு கடந்த ஆண்டு நடந்த கருநாடகா 10ஆம் வகுப்புத் தேர்வில் மூன்றாவது மொழியான ஹிந்தியில் 90,000 பேர் தோல்வி

viduthalai
1 Min Read

பெங்களூர், மார்ச் 23 கருநாடகாவில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை தேர்வு செய்து 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 90,000 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்மொழி கொள்கையை திணிப்பதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியில், கருநாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்றாம் மொழிப் பாடமாக, தேர்ந்தெடுத்த ஹிந்தியில் தோல்வியடைந்தது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் நலன்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகளுடன் ஒத்துப் போகும் ஒன்றை தேர்வு செய்ய அனுமதிப்பதற்கு பதிலாக, ஹிந்தி மொழியை மூன்றாம் மொழியாக தேர்வு செய்ய கட்டாயப்படுத்தியதே மாணவர்கள் தோல் விக்கு காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவித் ததை அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
கருநாடகாவில் ஆறாம் வகுப்பு முதல், மூன்றாம் மொழியாக ஹிந்தியை படிப்பது கட்டாயமாக்கப ்பட்டுள்ளது.

ஆனால் ஹிந்தி மொழி யில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மற்றும் மூன்றாம் மொழியாக ஹிந்தியை கற்றுக் கொள் வதில் ஆர்வம் இல்லாததால், மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தது அதிக மாகியுள்ளதாக அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

கன்னடம் பேசும் மாணவர்கள்மீது ஹிந்தி யை திணிப்பது நடை முறைக்கு ஏற்றது இல்லை என்றும் ஏனெனில் மாணவர்களில் பெரும்பாலோனோர் பள் ளியை தாண்டி ஹிந்தி மொழியை கற்க வாய்ப் பில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருநாடகாவில் அரசு தொடக்க பள்ளிகளில் ஹிந்தி ஆசிரியர்கள் மிகக் குறைவாக உள்ளனதாகவும் 3ஆவது மொழியாக ஹிந்தியை திணிப்பதன் மூலம் மாணவர்களின் தாய்மொழியான கன்னடம் மற்றும் 2ஆவது மொழியான ஆங்கிலம் ஆகியவற்றில் கற்றல் திறன் குறைந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *