சென்னை, மார்ச் 21- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (20.3.2025) சட்டப்பேரவையில் விவாதத்தின்போது அளித்த பதில்:
சட்டப்பேரவையில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இருக்கிற மருத்துவர்களின் எண் ணிக்கை மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களின் எண்ணிக்கை அவருக்கு நன்றாக தெரியும். மருத்துவர் காலிப்பணியிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட்டு இருப்பது என்பது மருத்துவத்துறை வரலாற்றில் இப்போது முதன் முறை. அந்தவகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத் துவர்கள் இருக்கிறார்கள். ஏதா வது மேல் சிகிச்சை என்று வருகிற போதுதான் ஆத்தூரிலிருந்து சேலத்திற்கு ஏற்பாடு செய்வார்களே தவிர எல்லோரையும் சேலத்திற்கு அனுப்பமாட்டார்கள். அந்த உண்மைத் தன்மைகளை அறிந்து உரையாற்றுவது சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
ECG எடுப்பதற்கு மருத்துவர் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. டெக்னிசியன் இருந்தாலே போதும். அதேபோன்று மயக்கவியல் நிபுணர் பற்றி சொல்லி இருக்கிறார். அது அருகில் எங்காவது இருந்து Deputation-ல் இருந்து வந்து செய்வார்கள். அரசு மருத்துவமனைகளுக்கு என்ன அவசிய தேவைகள் இருக்கிறதோ அது அனைத்துமே ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு இருக்கிறது. நானே இரண்டு, மூன்று முறை அந்த மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன். அந்த மருத்துவமனையின் கூடு தல் கட்டமைப்பை திறந்து வைத்திருக்கி றேன். இன்னும் கூடுதல் மருத்து வர்கள் தேவைப்படுமானால் நியமிப்பதற்கும் இந்த அரசு தயாராக இருக்கிறது.
சேலத்தில் இருக்கின்ற மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில், இதுநாள்வரையில் PET-CT, Cath lab போன்ற எந்த வசதி யும் இல்லாத நிலையில் இருந்ததை அனைவரும் நன்றாக அறிவார்கள். கடந்த 4 ஆண்டுகளில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், சேலம் மருத்துவமனை வளாகத்தில் தற்போது PET-CT என்ற மிகப் பெரிய புற்றுநோயை மிகத் துல்லியமாகக் கண்டு அறிகின்ற கருவியும், கேத்லேப் என்கின்ற அதிநவீன இருதய சிகிச்சைப் பிரிவும் புதிதாக துவங்கப்பட்டுள்ளன என அமைச்சர் பதிலளித்தார்.