மயிலாடுதுறை மாவட்டம் மன்னன்பந்தல் அ.வ.அ.கல்லூரியில் வைக்கம் விழா!

1 Min Read

அரசியல்

மன்னன்பந்தல், ஜூலை 9- மயிலாடுதுறை மாவட் டம் மன்னன்பந்தல் அ.வ. அ.கல்லூரி தமிழ்த்துறை சார்பில் 7.7.2023 அன்று காலை 11 மணியளவில் ‘திண்ணை (வாசிப்பின் வாசல்)’ நிகழ்ச்சி நடை பெற்றது. 

இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் மு.சரவணன் வரவேற்க தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் திரு முருகன் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில் பெரியாரின் போராட்ட வாழ்க் கையை எடுத்துரைத்து ஏற்றத் தாழ்வற்ற சமு தாயத்தைப் படைப்பதே அவரது தலையாய கொள்கையாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் செல்ல.கனிமொழி ‘வைக் கம் போராட்டம் – சமூக சீரமைப்பின் தொடக்கம்’ என்ற தலைப்பில் சிறப்பு ரையாற்றினார்.

பேராசிரியர் கனி மொழியின் பெற்றோர் இரெ செல்லதுரை– வண் டார்குழலி ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா  இராவணலீலா மாநாட்டில் அன்னை மணியம்மையார் தலை மையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக் கது.

துறைத்தலைவர் தமிழ்வேள் நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கி பெரியாரின் வைக்கம் போராட்ட பங்களிப்பை மிகவும் உணர்ச்சிபொங்க எடுத்துரைத்தார்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன், செயலாளர் கி.தளபதி ராஜ், இரெ.செல்லதுரை ஆகியோருக்கு புத்தகங் கள் வழங்கி சிறப்பு செய் யப்பட்டது.

முதுகலை இரண்டா மாண்டு மாணவி ஜெ. பிருந்தா நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *