கிருட்டினகிரி (மத்திய) மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அ.மாதேசு (17.3.2025) பிறந்தநாள் நிகழ்வில் திராவிடர் கழகம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை செயராமன், கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு இயக்க நூல்கள் வழங்கி சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது விசிக மாவட்டச் செயலாளர் அ.மாதேசு தனது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ1,000/-ஆயிரம் மட்டும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமனிடம் வழங்கினார். அப்பொழுது எழுச்சித் தமிழரின் தனிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், ஓசூர் மாவட்டச் செயலாளர் இராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். விசிக கிருட்டினகிரி ஒன்றியச் செயலாளர் ஆலப்பட்டி இரமேசு, நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் சங்கர் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர விசிக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
விடுதலை வளர்ச்சி நிதி
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
