மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கின்ற ஆளுநர் மீது சட்ட நடவடிக்கை: கேரள அரசு முடிவு

1 Min Read

திருவனந்தபுரம், ஜூலை 9 – சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களுக்கு பல மாதங் களாக ஒப்புதல் அளிக்காததால் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் மீது சட்ட நடவடிக்கை மேற் கொள்வது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது. கேரள அரசுக்கும், மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங் களுக்கு முன் கேரள சட்டமன் றத்தில் லோக் ஆயுக்தா சட்டத் திருத்த மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக் கும் மசோதா உள்பட 6 மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை ஆளுநர் ஆரிப் முகம்மது கானின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அதில் கையெழுத்து போட முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். கேரள அரசு பலமுறை வலியுறுத்தியும், 4 அமைச் சர்கள் நேரடியாக சென்று விளக் கம் அளித்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுத்து விட்டார். சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது ஏற் கத்தக்கதல்ல என்று முதலமைச் சர் பினராயி விஜயன் பலமுறை வெளிப்படையாகவே கூறினார்.

இந்நிலையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட கேரள அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அட்வகேட் ஜென ரலுடன் கேரள சட்டத்துறை செயலாளர் ஆலோசனை நடத் தினார். இந்த ஆலோசனையின் படி விரைவில் ஆளுநருக்கு எதி ராக உச்சநீதிமன்றத்தை நாட கேரள அரசு தீர்மானித்துள்ள தாக கூறப்படுகிறது. சமீபத்தில் தெலங்கானா அரசு அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *