குமரி மாவட்ட கழக சார்பாக அன்னை மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம்

1 Min Read

கன்னியாகுமரி, மார்ச் 19- கன்னியாகுமரி மாவட்ட சார்பாக கழக மேனாள் தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணி யம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட் டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற்றினார். அன்னையார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

மாவட்ட காப்பாளர் ஞா.பிரான்சிஸ், பொதுக் குழு உறுப்பினர் மு இராஜசேகர், கோட்டாறு பகுதி கழக தலைவர் ச.ச.மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். கழக மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக் சாண்டர், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ், கழகத் தோழர்கள் மு.குமரிச் செல்வன், பா.சு. முத்து வைரவன், ஆன்டனி பெனடிக்ட், இரா.முகிலன் மற்றும் பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *