தஞ்சை பி.பிரேமா மறைவு

Viduthalai
1 Min Read

அரசியல்

குடும்ப விளக்கு நிதி நிறு வனத்தின் தலைமை நிர்வாகி பி.வேணுகோபாலின் தாயார் பி.பிரேமா (வயது 82) கடந்த 28.6.2023 அன்று தஞ்சை, பள்ளியக்கிரஹாரம் இல்லத்தில் மறைவுற்றார்.

தகவல் அறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், வேணுகோபாலிடம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

நிதிநிறுவனத்தின் இயக்குநர்கள், ஆடிட்டர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார். 

திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர்கள் கே.ஜெயராமன், எம்.அய்யனார், நகரத் தலைவர் நரேந்திரன், செய லாளர் டேவிட் மற்றும் இயக்கத் தோழர்கள் குடும்பத்தோடு வந்து நேரில் அம்மையாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

மறைந்த அம்மையாருடன் பிறந்த ஏழு சகோதரிகள் (பட்டதாரி ஆசிரியர்கள்), இரண்டு சகோதரர்கள் (வங்கி அதிகாரி, பொறியாளர்), கணவர் வி.பார்த்தசாரதி (வயது 84) மகள் இராஜகாந்தம், மகன் வேணுகோபால், செல்வ குமார் ஆகியோர் குடும்பத்தோடு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *