புதுக்கோட்டை மார்ச் 18- புதுக் கோட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் 22.3.2025 அன்று மாலை 4-30 மணியளவில் சிதம்பரம் பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் நடைமுறைப் படுத்துதல் தொடர்பாக கலந்துறவாடல் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்விற்கு மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகிக்கிறார். மாவட்டக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர்கள் சு.தேன்மொழி, மூ.சேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்நிகழ்வில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கருத்துரை வழங்க உள்ளார். இந்நிகழ்விற்கு கழகத் தோழர்கள் மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி தோழர்கள் குறித்த நேரத்திற்கு வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
புதுக்கோட்டையில் கலந்துறவாடல் கூட்டம்
Leave a Comment