கீரமங்கலம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அ. தங்கராசு மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

1 Min Read

அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கீரமங்கலம் AkM நிலையம்
அ. தங்கராசு (வயது 89)அவர்கள் மறைந்தார் (16.3.2025) என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
இவர் புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட தி.க. தலைவர் அடைக்கலம் அவர்களுடைய சகோதரர். கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர். என்னை அழைத்து பல பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்தியவர். தந்தை பெரியாரை அழைத்தும் கூட்டம் நடத்திய பெருமைக்குரியவர்.
இவரது பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது துணைவியார் ராசலெட்சுமி, மகன்கள் அழகரசன், இளங்கோ, மணிவண்ணன், ஆசிரியர் கண்ணன், மகள்
கண்மணி ஆகியோருக்கும், கழகத் தோழர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

17.3.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *