பெரியார் விடுக்கும் வினா! (1592)

1 Min Read

வேதத் தேவர்களைக் கடவுள்களாகப் புராண இதிகாசங்களில் கூறி வருவதில் மேற்கொண்டு சில கடவுள்களைப் புராண இதிகாசக் கடவுள்களாகப் பெருக்கிக் காட்டி கற்பனைக் கதைகள் எழுத வேண்டி வந்த அவசியத்தை முன்னிட்டு இந்த வேதத் தேவர்களுக்குப் பெண்டாட்டிகள், மக்கள்கள், அவற்றிற்குப் பெண்டாட்டிகள் முதலியவைகளையும் மற்றும் இந்த வேதக் கடவுள்கள் அவதாரம் எடுத்ததாகவும், மற்றும் சில காரணங்களுக்குத் தோற்றமெடுத்ததாகவும் கூறி அந்த முறையில் மேலும் பல கடவுள்களையும் தற்காத்துக் கொண்டார்கள் பார்ப்பனர்கள்! என்றாலும் இப்படி கற்பித்த எந்தக் கடவுள்களுக்கும், எந்தப் புராண இதிகாசங்களிலும் கடவுளுக்கு உள்ள இலட்சணம், இலக்கணம் எனச் சொல்லப்படுபவைகளில் எதையுமே கூறாதது ஏன்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *