வேதத் தேவர்களைக் கடவுள்களாகப் புராண இதிகாசங்களில் கூறி வருவதில் மேற்கொண்டு சில கடவுள்களைப் புராண இதிகாசக் கடவுள்களாகப் பெருக்கிக் காட்டி கற்பனைக் கதைகள் எழுத வேண்டி வந்த அவசியத்தை முன்னிட்டு இந்த வேதத் தேவர்களுக்குப் பெண்டாட்டிகள், மக்கள்கள், அவற்றிற்குப் பெண்டாட்டிகள் முதலியவைகளையும் மற்றும் இந்த வேதக் கடவுள்கள் அவதாரம் எடுத்ததாகவும், மற்றும் சில காரணங்களுக்குத் தோற்றமெடுத்ததாகவும் கூறி அந்த முறையில் மேலும் பல கடவுள்களையும் தற்காத்துக் கொண்டார்கள் பார்ப்பனர்கள்! என்றாலும் இப்படி கற்பித்த எந்தக் கடவுள்களுக்கும், எந்தப் புராண இதிகாசங்களிலும் கடவுளுக்கு உள்ள இலட்சணம், இலக்கணம் எனச் சொல்லப்படுபவைகளில் எதையுமே கூறாதது ஏன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’