பெரியார் ஆய்வு நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

Viduthalai
0 Min Read

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவரும், நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் காப்பாளருமான பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள், சிறு வயது முதல் தான் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியங்கள், சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, பொதுவுடைமைத் தத்துவங்கள், சுயமுன்னேற்றம் குறித்த நூல்கள் உள்ளிட்ட 1022 நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நூல்களை வழங்கியமைக்கு நூலகத்தின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றி.

– நூலகர், பெரியார் பகுத்தறிவு நூலகம்
மற்றும் ஆய்வு மய்யம், பெரியார் திடல்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *