15.3.2025
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* எல்லாருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் அமைந்துள்ளது தமிழ்நாடு பட்ஜெட்.
* அனைவரையும் உள்ளடக்கிய முன்னோக்கி செல்லும் பட்ஜெட் என தமிழ்நாடு வர்த்தக அமைப்பு பாராட்டு.
* 10 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப் படும், 15000 மாணவர்கள் சேரும் வாய்ப்பு, தமிழ் நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு.
* 2 ஆயிரம் ஏக்கரில் உலகத் தரத்தில் சென்னை அருகே புதிய நகரம்: தமிழ்நாடு பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
* தொகுதி மறுவரையறை பிரச்சினை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பெயருக்கு பின் ஜாதிப் பெயர்களை பயன்படுத்தக் கூடாது, மகாராட்டிரா பீட் மாவட்ட தலைமை காவல் அதிகாரி, காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்; ஜாதி பதற்றங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை (1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் ஜாதி பட்டங்களை துறக்க வேண்டும் என்ற தீர்மானம்).
* ஒன்றிய அரசு எங்களை அச்சுறுத்துவதற்கு பதிலாக வடக்கின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்’, அமைச்சர் பழனிவேல் தியாகராசன் பேச்சு.
* ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்திருந்தனர். (பெரியார் முதல் தி.மு.க வரை… நாடாளுமன்றம் முதல் தெருக்கள் வரை; திராவிடத்தின் போராட்ட நிறம் கருப்பு!)
* ஆர்.எஸ்.எஸ் என்பது நாட்டின் ஆத்மா முழுவதும் பரவியுள்ள ஒரு புற்றுநோய் என்ற தனது கருத்தை திரும்பப் பெற முடியாது, காந்தியாரின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உறுதி. இனி அவர்கள் காந்தியாரின் சிலையை தகர்க்கக் கூட தயாராக இருப்பார்கள் என்றும் பேச்சு.
தி இந்து:
* விலைவாசி உயர்வுடன் பொருந்தக்கூடிய வகை யில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த வேண்டும், ஒன்றிய அரசுக்கு நாடாளு மன்றக் குழு மீண்டும் பரிந்துரை
.- குடந்தை கருணா