புதுகை தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்கு

1 Min Read

ஆலங்குடி, ஜூலை 10 – புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே இனாம்கிராமத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (49). கார் வாங்கி விற்பனை செய்து வரும் இவர், திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணசுந்தரிடம் கொடுத்த புகார் மனுவில், புதுக்கோட்டை சார்லஸ் நகரில் வசிக்கும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. பொருளாளர் முருகானந்தம், தொழில் செய்வதற் காக கடந்த 2017இல், 2 தவணையாக ரூ.60லட்சம் கடன் வாங்கினார். பலமுறை கேட்டும் கடன் தொகையை திருப்பித்தராமல் மோசடி செய்துவிட்டார். 

2022 டிசம்பர் 7ஆம் தேதி எனது அலைபேசிக்கு தொடர்பு கொண்ட முருகானந்தம் என்னையும், என் குடும்பத்தினரையும் மத ரீதியாக இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து கீரமங்கலம் காவல்துறையினர் மோசடி, மதரீதியாக இழிவுபடுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் முருகானந்தம் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *