திருவிடைமருதூர் ஒன்றியம் முழுவதும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை நடத்த கலந்துரையாடலில் முடிவு

2 Min Read

அரசியல்

திருவிடைமருதூர், ஜூலை 10 திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஒன்றிய தலை வர் எம். என். கணேசன்  இல்லத்தில் 4.7.2023 அன்று மாலை 6 மணி யளவில் எம். என். கணே சன் தலைமையில் நடை பெற்றது.

திருவிடைமருதூர் ஒன்றிய துணைத் தலைவர் பவுண்டரிபுரம் முருகேசன் மற்றும் ஒன் றிய அமைப்பாளர் நா. சிவக்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார்கள்.

தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி, பொதுக் குழு உறுப்பினர் வழக்குரை ஞர்- சு.விஜயக்குமார், குடந்தை மாவட்ட தலை வர் வழக்குரைஞர் கு.நிம் மதி, செயலாளர் உள்ளிக் கடை சு. துரைராசு, குடந்தை மாநகர செய லாளர் வழக்குரைஞர் பீ. ரமேஷ், ஒன்றிய செயலா ளர் (தெற்கு) அ.சங்கர், நகர தலைவர் ந.குரு மூர்த்தி, பேராசிரியர் ர. தமிழ் வேந்தன், ஜவகர் அரிய புத்திரன், இரா. கண்ணன், பிரபானந்தம், மேனாள் மாவட்ட இணைச் செயலாளர் தி.மில்லர், திருவிடைமரு தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ந.முருகானந் தம், கும்பகோணம் மாந கர மகளிர் அணி தலைவர் எஸ். அம்பிகா, மாவட்ட மகளிர் அணி தலைவர் எம். திரிபுரசுந்தரி, மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ஆசிரியர் மு. அறிவு மணி,  குடந்தை மாவட்ட இளைஞர் அணி யின் தலைவர் பொறி யாளர் க. சிவக்குமார், நகர துணை செயலாளர் த.அம்பிகாபதி மற்றும் முக்கிய கழக தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரை களை வழங்கினார்கள்.

கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரங்கல் தீர்மானம்: கும்பகோணம் மாவட்ட தலைவர் நிம்மதியின் தாயார் மல்லிகா ராணி,  தெற்கு ஒன்றிய செயலா ளர் சங்கரின் தாயார் தங் கம்மாள், ஜாதி ஒழிப்பு வீரர் மொட்டையன் இணையர் கல்யாணி, ஒன்றிய செயலாளர் முரு கானந்தத்தின் தந்தையார் நடராஜன், நகர பொறுப் பாளர் குருமூர்த்தியின் தாயார் அமுதவல்லி, மாநகராட்சி மகளிரணி தலைவர் அம்பிகாவின் மகள் நிஷாந்தினி, ஆகி யோரின் மறைவிற்கு கலந் துரையாடல் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக் கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

குடந்தை மாவட்டக் கழகம் சார்பாக திருநா கேஸ்வரத்தில் சிறப்பான முறையில் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத் திய ஒன்றிய தலைவர் எம்.எம். கணேசன், மாவட்ட தலைவர்  கு. நிம்மதி உள்ளிட்ட முக் கிய கழக பொறுப்பாளர் களுக்கு பயனாடை அணி வித்து மகிழ்ச்சியும் பாராட் டுதலும் தெரிவிக்கப்பட் டது.

திருவிடைமருதூர் ஒன்றிய கழகம் சார்பில் வைக்கம் போராட் டத்தை விளக்கி ஒன்றியம் முழுவதும் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது

‘விடுதலை’, ‘உண்மை’ சந்தாக்களை புதுப்பிப் பது மற்றும் அதிக அளவு சந்தாக்களை திரட்டுவது என்றும் முடிவு செய்யப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *