மதுரை, மார்ச் 11 தமிழ் நாட்டில் அரசு பணிகளில் சேர தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரி வித்துள்ளனர்.
பணி நீக்கம்
தேனியை சேர்ந்த ஜெய்குமார், உயர் நீதி மன்ற மதுரை அமர்வில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் “நான் தேனி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாததால் என்னை பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர். தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய மொழித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்,” என்று கூறியிருந்தார்.
மேல் முறையீடு
மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஜெய்குமாரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மின்வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், “மனுதாரரின் தந்தை கப்பற் படையில் பணிபுரிந்தவர். இடமாறுதல் காரண மாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்ததால் தமிழ் கற்கவில்லை. தற்போது தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள் ளார். எனவே பணியில் சேர்க்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
தமிழ் கட்டாயம்
பின்னர் நீதிபதிகள், “தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர, தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களுக்கு தமிழ் தெரியாது என்றால் என்ன செய்வது? அவரால் எப்படி அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, எந்த மாநிலத்திலும் அரசுப் பணியில் இருப்பவர்கள் அந்த மாநில மொழி தெரிந்து இருக்க வேண்டும். தெரியாவிட்டால் குறிப் பிட்ட கால அளவுக்குள் மாநில அரசு சார்பில் நடத் தப்படும் மொழித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஒரு மாநி லத்தின் அலுவல் மொழி தெரியாமல் அரசுப் பணிக்கு ஆசைப்படுவது ஏன்?” எனக் கூறி இறுதி விசாரணையை ஒத்தி வைத்தனர்.