வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்

Viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 9- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கட லோர தமிழ்நாட்டில் நாளை (10.3.2025) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மய்யம் தென் மண்டல இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: உள்தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (9.3.2025) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக் கூடும்.

காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 10ஆம் தேதி (நாளை) கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 11ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப் புள்ளது. 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *