கடவுளைக் கண்டால் கண்டுபிடியுங்கள் சேலத்தில் கோயிலில் அய்ம்பொன் சிலைகள் கொள்ளை

1 Min Read

சேலம், மார்ச் 9- சேலம் அருகே சாய்பாபா கோவிலில் அய்ம்பொன் சிலைகள், உண்டியல் பணம் உள்ளிட்டவை கொள்ளை போயின.

சேலம், அயோத்தியாப் பட்டணம், மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையோரம் சாய்பாபா, ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் 7.3.2025 அன்று இரவு, 11:30 மணிக்கு பூட்டப்பட்டது.

காலை, 6:00 மணிக்கு, மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பூஜாரி பிரபாகர், 35, கோவிலை திறக்க வந்தார். அப்போது, அய்ம்பொன் சாமி சிலைகள் கொள்ளைபோனது தெரிந்தது. அவர் புகாரின்படி அம்மாபேட்டை காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரித்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
கோவிலில், அரை அடி உயரத்தில் இருந்த, விநாயகர், முருகர், ஆஞ்சநேயர், துர்க்கை, வாராகி அம்மன் ஆகிய, அய்ந்து அய்ம்பொன் சிலைகள் கொளையடிக்கப்பட்டுள்ளன. தவிர 1.5 அடி உயரத்தில் இரு அய்ம்பொன் வேல்கள், இரு மணிகள் மட்டுமின்றி, உண்டியலும் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளை போயுள்ளது.
இருவர், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கேமராவில் பதிவாகியுள்ளது. கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்று கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *