நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கும்: மாநகராட்சி ஆணையர்

2 Min Read

அரசியல்

சென்னை ஜூலை 11 – சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதையில் வசிப்பவர் களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கி ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்க ஏற்பாடு செய் யப்படும் என மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம் பர் மாதம் 15ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தாக கூறப்படுகிறது. இந்த திட்டத் துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட் டத்தை செயல்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.

இதேபோல, அரசு சார்பில் விண்ணப்பப் படிவம் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த படிவத்தை நியாய விலைக் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வழங்க உள்ளனர். சென்னையை பொறுத்த வரை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு துறை அதி காரிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதற்காக விண்ணப்பப் படிவம் அச்சடிக்கும் பணி நடந்து வரு கிறது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறிய தாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண் ணப்பப் படிவத்தை வீடு, வீடாக வழங்குவதற்கும், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை திரும்ப பெறுவதற்கும் அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட உள் ளோம்.

குடும்ப கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகள், சமுதாயக் கூடங் கள், அரசு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம். விண்ணப்பப் படிவங்களை கொண்டுவரும் மக் களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். கூட்ட நெரி சலை தவிர்க்கும் வகையில் ஒரு நாளைக்கு ஒரு நியாய விலைக் கடைக்கு 50 முதல் 60 பேர் வரை யில் வரவழைத்து விண்ணப்பம் வழங்க திட்டமிட்டுள்ளோம். 

ஒவ்வொரு முகாமுக்கும் ஒரு பொறுப்பு அதிகாரி, வரி மதிப்பீட் டாளர், சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர், துப்புரவு ஆய் வாளர் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். சென்னை யில் ஏழை, எளிய மக்கள் குடும்ப அட்டைகள் இல்லாமல் இருக் கலாம். குறிப்பாக, நடைபாதையில் வசிப்பவர்கள், ஆதரவற்றோர், இரவு நேர காப்பகங்களில் உள்ள பெண்கள் ஆகியோரை கண்டறிந்து குடும்ப அட்டை கிடைக்க ஏற்பாடு செய்து, அவர்களுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், வங்கிக் கணக்கு இல்லாத பெண்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்கி அவர்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்க தேவையான நட வடிக்கை எடுக்க உள்ளோம். உண்மையான பயனாளிகள் விட்டுப் போகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *