மாதனூர், மார்ச் 8- திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 06.03.2025 அன்று வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மகளிர் நாள் முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு)டி.கே.கங்கா தலைமையேற்றார்.பேராசிரியர் ஆர்.ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.ரம்யா தொடக்க உரையாற்றினார்.பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன் பரசன்,வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி.இ.சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக மகளிரணி தோழர், எழுத்தாளர் ந.தேன் மொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பெண்ணுரிமை குறித்து கல்லூரி மாணவிகளிடம் உரையாற்றினார். வேலூர் மாவட்டபகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயக மூர்த்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரி யர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். முடிவில் பேராசிரியர் அர்ச்சனா நன்றி உரையாற்றினார்.