வல்லம், மார்ச் 8- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறை மாணவர்கள் கோத்தகிரியிலுள்ள NPA நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 05.03.2025 அன்று மாநில அளவில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்கில் கட்டுரை வாசித்தலில் (Online Mode) ஆர்வத்துடன் பங்கேற்று எஸ்.குமரன், ஜே.ஹாரீஸ் ஆகியோர் “AI in Electronics Design & Manufacturing” என்ற தலைப்பில் முதல் பரிசையும், ஜே.சையத் இப்ராஹிம், ஏ.நஜீத் ஹமத் ஆகியோர் “Smart Grid Technologies” என்ற தலைப்பில் மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.
இப்பெருமைமிகு பரிசுகளை பெற்ற மாணவர்களை இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.