நீடூர், மார்ச் 7- மயிலாடுதுறை ஒன்றிய கழக மேனாள் தலைவர் மறைந்த ஆர்.டி.வி.இளங்கோவன் மற்றும் அவரது இணையர் செந்தாமரை ஆகியோரின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு 28.2.2025 காலை 11.00 மணி அளவில் நீடூர் தங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேக ரன் தலைமையேற்க மாவட்டச் செயலாளர் கு.இளமாறன் முன்னிலையில் கழக காப்பாளர் கொக்கூர் சா.முருகையன் படத்தினை திறந்துவைத்தார். கி.தளபதிராஜ் நிகழ்வை ஒருங்கிணைக்க இனியன் இளங் கோவன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தனது உரையில் மறைந்த இளங்கோவனின் தந்தையார் ஆர்.டி.வேலு அவர்கள் 1950களில் நடைபெற்ற திராவிடர் கழக போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றவர் என்பதை குறிப்பிட்டு அதே வழியில் இளங்கோவனுன் இந்த இயக்கத்திற்கு அயராது பணியாற்றியவர் என்றார். இளங்கோவனை தான் முதலில் சந்தித்த நிகழ்வையும், கழகப் பணிகளில் போராட்டங்களில் அவர் காட்டிய உறுதியையும் சிறப்பாக எடுத்துரைத்தார்.
படத்தினை திறந்துவைத்த குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முரு கையன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களை எவ்வளவு பாதுகாப்பாக வளர்த்தெடுக் கிறார்களோ அதே கடமை பிள்ளைகளுக்கும் தங்கள் பெற்றோர்களை பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
நிகழ்வை ஒருங்கிணைத்த கி.தளபதி ராஜ் தனது உரையில் ஆர்.டி.வேலு அவர்களுடைய குடும்பம் 1950 களில் மயிலாடுதுறையில் நாங்கள் வசித்த கேணிக்கரைப் பகுதியில் பல ஆண்டுகாலம் வசித்தவர். நகர மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். பெரியாரின் போராட் டங்களில் மயிலாடுதுறை வரலாற்றைத் தொகுத்தால் அய்யா ஆர்.டி.வேலு அவர்கள் இல்லாத போராட்டமே இருக்காது. அவரைப்போலவே அண்ணன் இளங்கோவன் எல்லோரிடமும் மிகுந்த பாசத்தோடு பழகக்கூடியவர். அவரது இறப்பு இயக்கத்திற்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலா ளர் க.அருள்தாஸ், நகர தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் பூ.சி.காமராஜ், ஒன்றிய தலைவர் அ.சாமிதுரை, குத்தாலம் நகர தலைவர் சா.ஜெகதீசன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் தி.சபாபதி, மாவட்ட ப.க.தலைவர் இரெ.செல்லதுரை, நகர ப.க தலைவர் க.செல்வராஜ், விவசாய அணி செயலாளர் கு.இளஞ்செழியன், தமிழ்நிலவன் மற்றும் இயக்கத்தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்துகொண்டனர்.