பெரியார் காலம் தொட்டு இன்று வரை நம் கழக பணிகளுக்கு மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை செய்து இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பவர். திருப்பத்தூர் மாவட்ட விடுதலை வாசகர் வட்ட துணைச் செயலாளர், பெரியார்பெருந்தொண்டர் எஸ்.கே.பெருமாள் சாமி. அவர் தன் 83ஆவது பிறந்த நாளையொட்டி (01.03.2025) பெரியார் உலகத்திற்கு ரூ. 2000அய் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசனிடம் வழங்கினார். உடன் அவர் வாழ்விணையர் இராதா. இதற்கு முன்பும் பலமுறை பெரியார் உலகிற்கு நிதி வழங்கியுள்ளார். தொடர்ந்து நிதி வழங்குவேன் என்று உறுதி கூறினார். மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அவர்களுக்கு பெரியார் படம் வழங்கி பயனாடை அணிவிக்கப்பட்டது.
எஸ்.கே.பெருமாள் சாமி 83ஆவது பிறந்த நாளையொட்டி பெரியார் உலகிற்கு நிதி
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books