இந்தத் திராவிடர் கழகம் பார்ப்பானைச் சேர்க்காது. அவனும் இதில் வந்து சேரமாட்டான். ஏனென்றால் பார்ப்பான் தன்னைத் திராவிடன் என்று கூறுவானா? வேறு எந்தப் பேரைச் சொன்னாலும் பார்ப்பான் வந்து சுளுவாக அதனுள் புகுந்து விடுவான். அதோடு அந்தக் கட்சிகளுக்கே தலைவனாகியும் விடுவான். இன்றைக்குள்ள எல்லாக் கட்சிகளுக்கும் அவன்தான் தலைவன். பார்ப்பான் வந்து நுழையாத மாதிரி இருப்பதற்காகத்தான் இப்படிப்பட்ட கழகம் என்ற பெயர் வைத்திருப்பதாகும். அப்படி பார்ப்பான் தன்னை திராவிடன் என்று சொன்னால் – உடனே “ஏண்டா உனக்கு இந்தப் பூணூல்? ஏன் உன் மனைவி இப்படி புடவை கட்டிக் கொள்ளுகிறாள்?” என்று கேட்க மாட்டார்களா? அப்போது கூட அவன் இவற்றையெல்லாம் கைவிட மறுத்து ஓடி விடுவானேயன்றி, அவற்றையெல்லாம் விட்டு விட்டு மனிதனாக ஒப்புக்கொள்வானா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1579)

Leave a Comment