நம்முடைய எரிமலையின் இல்ல மணவிழா அழைப்பிதழ் செலவினை பார்க்கும்போது ஒரு புத்தகமே போட்டுக் கொடுத்திடலாம். அழைப்பிதழுக்கே இவ்வளவு செலவு செய்யக்கூடாது. ஏன் என்னுடைய படத்தை பெரிதாக போடறீங்க? மணமக்கள் படங்களைத்தான் பெரிதாக போட வேண்டும். கதாநாயகர்கள் அவர்கள்தான். அழைப்பிதழ் தகவலுக்காகத்தான். இனிமே திருமணம் செய்துவைக்க கூடியவர்கள் சிக்கனமாக செலவு செய்து, மீதமாகும் பணத்தை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு கொடுங்கள் அல்லது பெரியார் உலகத்திற்குக் கொடுங்கள். நேற்று கூட பள்ளிக்கூடம் படிக்கும் பெண் குழந்தை உண்டியல் காசை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார். அந்த மாதிரி முதலமைச்சர் நிவராண நிதிக்கு கொடுங்கள். பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆதரவாக அனுப்புகிறோம் என்று திருமண வீட்டார் சாப்பாடு போடுவதில் கூட சிக்கனமாக இருந்து தமிழ்நாடு அரசின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புங்கள். சிக்கனம் என்பதுமூலம்தான் நம் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். – மதுரையில் காலை 10 மணிக்கு நடைபெற்ற இரா.பிரபாகரன் – க.மதுமிதா இணையேற்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி உரையின் ஒரு பகுதி (27.02.2025)