கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read

22.2.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேன் கூட்டில் கல் எரியாதீர், தர்மேந்திர பிரதானுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்று பிளாக்மெயில் செய்வது அரசியல் இல்லையா? ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒடிசா புவனேஷ்வரில் உள்ள கிட் பல்கலைக்கழக விடுதியில் நேபாள மாணவி இறந்ததால், நேபாளத்தைச் சேர்ந்த 500 மாணவர்கள் போராட்டம். ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியீடு.
* அதானி பிரச்சினை தனிப்பட்ட விடயம் அல்ல, நாட்டின் பிரச்சினை: அமெரிக்க பத்திரிகைகளுக்கு இது தனி நபர் பிரச்சினை என பிரதமர் மோடியின் கருத்துக்கு ராகுல் பதிலடி.
* அமெரிக்காவின் உசைட் (USAID) நிதி விவகாரத்தில், பாஜக தனது பாவங்களை மறைக்க திசை திருப்புவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தெற்கு ரயில்வே 13 ஜோடி ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பயணத்திற்கு கிடைக்கும் பொது வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. அகற்றப்பட்ட பெட்டிகள் குளிரூட்டப்பட்ட மூன்று அடுக்கு பெட்டிகளால் மாற்றப்படும். பிப்ரவரி 15 அன்று தெற்கு ரயில்வே உத்தரவின்படி, திருத்தப்பட்ட பெட்டி அமைப்பு பிப்ரவரி 21 முதல் அமலுக்கு வரும்.
தி இந்து:
* மும்மொழி கல்வி கொள்கை திட்டத்தை ஏற்கா விட்டால் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை தமிழ்நாடு இழக்க நேரிடும் என ஒன்றிய அமைச்சர் கூறுவதா? பாஜக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கண்டனம்.
* பாலியல் சமத்துவம் என்ற கருத்து பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்;, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தல். மகள் மற்றும் மகனுக்கு இடையிலான பாகுபாட்டை பெற்றோர்கள் நிறுத்த வேண்டும் எனவும் கருத்து.
* யு.ஜி.சியின் வரைவு அறிவிக்கையை எதிர்க்கும் மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளன. யுஜிசி இந்த ஏராளமான அக்கறையுள்ள குரல்களை புறக்கணிக்கக் கூடாது, மேலும் புதிய விதிமுறைகளை அறிவிப்பதற்கு முன்பு அதன் வரைவில் இருந்து கூட்டாட்சி எதிர்ப்பு விதிகளை நீக்க வேண்டும் என்கிறது தி இந்து தலையங்கம்.
தி டெலிகிராப்:
* மூன்று மொழி கொள்கை சர்ச்சை: ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாததால் தமிழ்நாட்டிற்கான நிதியைத் தடுக்கிறது. பிரதமர்-சிறீ பள்ளித் திட்டத்தை செயல்படுத்தாததால் மேற்கு வங்க மாநில அரசுக்கு பிறகு சமக்ர சிக்ஷா அபியான் (SSA) இன் கீழ் நிதி நிறுத்தப்பட்ட இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு.
* பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க வெளியுறவுத் துறையில் இருந்து நிதி பெறும் அமெரிக்க இளம் அரசியல் தலைவர்கள் குழுவின் மேனாள் மாணவர் என்று பலர் கூறினர். இக்குழு உசை (USAID) துறையின் கீழ் வருகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
* “ஒன்றிய அரசு மாநிலத்தில் இருந்து வசூலிக்கும் வரியை நாங்கள் செலுத்த மாட்டோம் என்று சொல்ல ஒரு நொடி போதும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *