நியூயார்க், பிப்.20 கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டில்லியை தலைமையி டமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாது காப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.இந்த வழக்கில் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சவுரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப் பட்டுள்ளன.
எனவே இந்த இரண்டு வழக்கு களையும், நியூயார்க் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று வழக்கு விசார ணையின்போது, அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த உதவு மாறு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக அதிகாரிகளின் உதவியை கோரியுள்ளதாக அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.