வணக்கம். சென்னை அண்ணா நகர், பழைய சிந்தாமணி அங்காடி எதிரே, வள்ளியம்மாள் பள்ளி வளாகம் ஒட்டி சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள நடைமேடை, பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு பெரும் உதவியாக இருந்தது.
தற்போது இந்த நடைமேடையில், வழியை மறித்து, ஒரு கோயில் கட்டப்பட்டு, உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் நடைமேடையை பயன்படுத்த முடியாமல், போக்குவரத்து வாகனங்கள் செல்லும் பாதையில் நடந்து செல்லும் அபாய நிலை உருவாகி உள்ளது.
நடைபாதையில் மக்களுக்கு இடையூறாக உள்ள கட்டடங்கள், கோவில்கள் அகற்றப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு உதவ வேண்டும் என நீதிமன்றங்கள் தொடர்ந்து அறிவுறுத்தியும், தீர்ப்பளித்தும் உள்ளன.
ஆகவே, இதனை கருத்தில் கொண்டு, அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளி வளாகத்தை ஒட்டி (பழைய சிந்தாமணி கூட்டுறவு அங்காடி எதிரே) சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்றி, பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழியை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள்,
கோ.கருணாநிதி
9381007998
நகல்: பெருநகர சென்னை மாநகர மேயர், சென்னை