கோதுமை, துவரம் பருப்பு – தமிழ்நாட்டுக்கு தேவை பத்தாயிரம் டன் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

Viduthalai
3 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூலை 13 – தமிழ்நாட்டுக்கு பத்தாயிரம் டன் கோதுமை மற்றும் துவரம் பருப்பு தேவை என்று ஒன்றிய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதம் வருமாறு:-

உணவு பொருள் பண வீக்கத்தில் காணப்படும் கவலைக்குரிய நிலை குறித்து ஒன்றிய அரசின் கவனத்துக்கு கொண்டுவர விழைகிறேன். உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதில் மாநில அரசுகளுக்கு உதவிட தேவையான நடவடிக்கைகளை உடன டியாக எடுக்க வேண்டும்.

அத்தியாவசிய உணவு பொருட்க ளான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால், ஏழை மெற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக் கின்றனர். 

ஏற்கனவே பணவீக்கத்தை பொறுத்த வரையில் 2023 மே மாதத்தில் தானி யங்கள் மற்றும் அவற்றின் தயாரிப் புகளுக்கு 12.65 சதவீதம் ஆகவும், பருப்பு வகைகள் மற்றும் அவற்றின் தயாரிப் புகளுக்கு 6.56 சதவீதம் ஆகவும் இருந் தது என ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு இந்த நிலைமையை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறி, உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வெளிச் சந்தை விலையைவிட குறைவான விலையில் விற்பனை செய்வது உள் ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. 

நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் துவரம்பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது.

அனைவருக்குமான பொது வினி யோக திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் கோதுமையை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலை பருப்பு, மசூர் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் இருப்பு விவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இதுபோன்ற நடவடிக்கைகள் மேற் கொண்டுள்ள போதிலும், நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக, குறிப்பிட்ட சில அத்தியா வசிய உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக 10.7.2023 அன்று விரிவான ஆய்வு கூட்டம் நடத்தி, தமிழ் நாட்டில் கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் பல்பொருள் அங்காடிகள், நியாயவிலை கடைகள் மூலம் காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய் திட உரிய அறிவுரைகள் வழங்கப்பட் டுள்ளன.

மேற்கூறிய சில உணவுப் பொருட் களை உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள் முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளி கள் கோரப்பட்டு, அந்த நடவடிக்கை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 

உள்நாட்டு உற்பத்தி பற்றாக் குறையை கருத்தில் கொண்டு இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற் காக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும்.

ஒன்றிய அரசின் கையிருப்பில் இருந்து மேற்காணும் உணவு பொருட்களை விடு விப்பது நிலைமையை எளிதாக்கும் என் பதால், மாதம் ஒன்றுக்கு தலா 10 ஆயிரம் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்த பொருட்கள் கூட்டுறவு விற் பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப்படுத்தப் படும். இந்த விஷயத்தில் ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும். 

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *