”மாரியப்பன் சுயமரியாதைப் படிப்பகம்” என்ற ஒன்றை உருவாக்குங்கள்!

Viduthalai
2 Min Read

வ.மாரியப்பன் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை

திருச்சி, பிப். 16- சுயமரியா தைச் சுடரொளி வ.மாரியப்பன் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு படத்தைத் திறந்து வைத்து இரங்கல் உரை ஆற்றினார்.
திருவெறும்பூர் திராவிடர் கழகத்தின் சார்பில், சுயமரி யாதைச் சுடரொளி வ.மாரியப் பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி, திருச்சி துவாக்குடி மலைப் பகுதியில் உள்ள வ.உ.சி.நகர் சமுதாயக்கூடத்தில் 14.02.2025 அன்று மாலை 6 மணிக்கு நடந்தது. சி.கிருஷ்ணகுமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மு.சேகர் தலை மையேற்றார்.
துவாக்குடி நகர தி.மு.க. செயலாளர் இ.காயாம்பூ, மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி துணைச் செயலாளர் கோ. நீலமேகம், சிபிஅய் மாவட்டச் செயலாளர் செ.ராஜ்குமார், எல்.அய்.சி. காப்பீட்டு முதன்மை ஆலோசகர் பி.ராஜேந்திரன், சி.அய்.டி.யூ. தோழர் அருணன் ஆகியோர் இரங்கலுரை ஆற்றினர்.

தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் ப.சுப்பிரமணியன், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியசாமி, ஒன்றிய கழக செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், இரா.மோகன்தாஸ், பா.செந்தமிழினியன், த.விமலேஷ், திருச்சி மாவட்ட கழக செயலாளர் மகாமணி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கிலி முத்து, கனகராஜ், கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி, தி.தொ.க.செயலாளர் ஆ.அசோக்குமார், கல்பாக்கம் இராமச்சந்திரன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, மாவட்ட மகளிரணித் தலைவர் ரெஜினா, மாவட்ட மகளிரணிச் செயலாளர், திருவெறும்பூர் ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர் ரூபியா, ஆகியோர் முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தனர்.

கழகத் தலைவர் ஆசிரியர் படத்தினை திறந்து வைத்து இரங்கல் உரை ஆற்றினார். அவர் தனது உரையில், அரங்கம் நிறைந்து வெளியிலும் மக்கள் திரண்டு இருந்ததைக் கண்டு “இது ஒன்றே போதும் மாரியப்பன் எந்த அளவுக்கு கட்டுப்பாடான கொள்கை வீரராக இருந்துள்ளார் என்பதற்கு இது ஒன்றே சாட்சி” என்று சுட்டிக்காட்டினார். தந்தை பெரியார் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘இயற்கையின் கோணல் புத்தி’ என்ற சொற்றொடரை எடுத்தியம்பி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பகுத்தறிவாளர்கள் இதுபோன்ற துன்பத்தில் இருந்தாலும் உடனடியாக அதிலிருந்து மீண்டு விடுவார்கள். “ஒரு சுயமரியாதைக்காரரை; பெரியாரின் தொண்டரை; ஒரு கொள்கை வீரரை இழந்தோம் என்றால் ஒரு விஞ்ஞானியை இழப்பது போன்றது” என்று ஒப்பீடு செய்து காட்டினார். ”இதுதான் தனிமனித ஒழுக்கம், சமூகக் கூட்டு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று சொல்லி அந்தக் கருத்துக்கு மேலும் வலிவூட்டினார்.

அத்துடன், ”சுயமரியாதைச் சுடரொளியாகிவிட்ட மாரியப் பன் நினைவாக இந்தப் பகுதியில் காயாம்பூ போன்றவர்களின் உதவியுடன் மாரியப்பன் சுயமரியாதைப் படிப்பகம் ஒன்றை உருவாக்குங்கள், திராவிடர் கழகம் அதற்கு உறு துணையாக இருக்கும்” என்றும், ”மாரியப்பன் அவர்களின் மகள் வெற்றிமணி தந்தையின் பணியினை ஏற்று செயல்படுத்த வேண்டும்” என்றார். சுய மரியாதைச் சுடரொளி வ.மாரி யப்பனின் மகள் மா.வெற்றிமணி நன்றி கூறினார்.
விடுதலை கிருஷ்ணன், மூர்த்தி, வீரமணி, பாண்டியன், அன்பழகன், தாமஸ், செங்குட்டு வன், சங்கி முத்து உள்ளிட்ட ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் தோழர்கள் சுயமரியாதைச் சுடரொளி வ.மாரியப்பன் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
படத்திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக மறைந்த மாரியப்பன் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *