விளையாட்டு அமைப்புகளில் நேர்மை, சுதந்திரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Viduthalai
1 Min Read

புதுடில்லி,பிப்.16- இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்பு களில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தனிப்பட்ட லாபங்களுக்காக அந்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களில் எதேச்சாதிகாரம் செலுத்தும் நபா்கள் அவற்றிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனத்துக்கு கடந்த 2023 டிசம்பரில் தோ்தல் நடத்தப்பட்டு, நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். எனினும், தோ்தலுக்கு முன் டில்லி உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிா்வாகியால் சம்மேளன நிா்வாகம் மேற்கொள்ளப்படுவதாகவும், இது விதிகளை மீறிய செயல் என்றும் கூறிய பன்னாட்டு கபடி சம்மேளனம், இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனத்துக்கு தடை விதித்தது.

இதனால் இந்திய கபடி போட்டியாளா்கள், ஆசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில், ஈரானில் இம்மாதம் நடைபெறவுள்ள ஆசிய கபடி சாம்பியன்ஷிப்புக்கு தங்களை அனுப்ப, இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனத்துக்கு உத்தரவிடக் கோரி பிரியங்கா மற்றும் பூஜா என்ற இரு தேசிய கபடி வீராங்கனைகள், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் சூா்யகாந்த், என்.கோடிஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தி கூறியதாவது:
இந்த விவகாரத்தில் இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனம் உள்பட அனைத்து தரப்புக்கும் இடையே அதிகாரப்பூா்வ பேச்சு வாா்த்தை அடிப்படையில் தீா்வு காணப்பட வேண்டும். ஆசிய கபடி சாம்பியன்ஷிப் உள்பட அனைத்து பன்னாட்டு போட்டிகளிலும் இந்திய போட்டியாளா்கள் பங்கேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *