பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யூகேஜி மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா – கலை நிகழ்ச்சி

Viduthalai
2 Min Read

ஜெயங்கொண்டம், பிப்.11 8.2.2025 அன்று மாலை 4.00 மணி அளவில் ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யூகேஜி மழலையர்களுக்குப் பட்டமளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சி விழா முதல்வர் இரா.கீதா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக முனைவர் கே ரமேஷ் (முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயங்கொண்டம்), மதிவாணன் (போக்குவரத்து காவல் ஆய்வாளர் – ஜெயங் கொண்டம்), எஸ்.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) கலந்து கொண்டனர். சிறப்பு விருந் தினருக்கு பள்ளியின் முதல்வர் இரா.கீதா பொன்னாடை அணி வித்து நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பித்தார் எல்கேஜி முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ –மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர் .
எல்கேஜி மற்றும் யூகேஜி பயிலும் பெரியாரின் பிஞ் சுகள் தென்றலாக தவழ்ந்து வந்து அழகாக நடனமாடினர் . ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் விருந்தினரை வரவேற்று வரவேற்பு நடனம் ஆடினர். அய்ந்தாம் வகுப்பில் பயிலும் மாணவிகள் பெண் கல்வி யின் முக்கியத்துவத்தை நாடகத் தின் வாயிலாக அழகாக எடுத்துரைத்தனர்.

மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள் நாட்டுப்புறப் பாடலுக்கு ஆடிய நடனமும், வண்ண கோல்களை கையில் கொண்டு ஆடிய நடனமும் – கிராமியக் கலைகளை நம் கண் முன் கொண்டு வந்ததும், உள்ளத்தின் அழகு நாம் பேசு கின்ற உண்மை என்பதை ஆங்கில நாடகத்தின் வழியாக மாணவிகள் அழகாக நடித்தும் காட்டினர். கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் LKG மற்றும் UKG இரண்டு ஆண்டுகள் மழலையர் கல்வியை முடித்து 1-ஆம் வகுப்பில் அடியெடுத்து வைக்கப்போகும் UKG மழலைச் செல்வங்களுக்கு பட்டங்களை வழங்கி, அழியாத செல்வமாகிய கல்வி செல்வத்தை கல்வி நிறுவனங்களால் மட்டுமே அளிக்க முடியும்; ஆதலால் நிலையான கல்விச் செல்வத்தை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என சிறப்புரையில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும், ஒழுக் கத்தையும் அளிக்கும் கல்வி நிறுவனமாக பெரியார் பள்ளி விளங்குவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தன் உரையில் கூறினார். இவ்வாய்ப்பினை ஏற் படுத்தி கொடுத்த தாளாளர் வீ.அன்புராஜ் அவர் களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *