பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி

1 Min Read

திருச்சி, பிப். 10 1.2.2025 அன்று பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 2024-2025ஆம் கல்வியாண்டில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 11ஆம் வகுப்பு மாணவிகள் பிரியாவிடையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலோடு தலைமையாசிரியை சு.பாக்கியலட்சுமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு 11ஆம் வகுப்பு மாணவி ஆ.கா.நிஷாந்தி வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்பு மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

12ஆம் வகுப்பு மாணவிகள் இப்பள்ளியில் தாங்கள் பயின்ற அனுபவங்களை சிறப்பாக பதிவு செய்தனர். தாங்கள் இப்பள்ளியில் கல்வியுடன் தன்னம்பிக்கை, பகுத்தறிவு, எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகிய வற்றை கற்று நாங்கள் சிறந்த மாணவிகளாக செல்வதற்கு இப்பள்ளியே காரணம் என்பதை பதிவு செய்தனர்.

நினைவுப்பரிசுடன் கூடிய சிற்றுண்டி வழங்கப்பட்டு பின்பு மாணவிகளுக்கு ஆ.சிராஜ் நிஷா நன்றி கூறினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் பொருளியல் ஆசிரியை D.விக்டோரியாதேவி தலைமையில் 11ஆம் வகுப்பு மாணவிகள் ஏற்று நடத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *