கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.2.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தேசிய கல்விக் கொள்கையையும், அதன் வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, தமிழ்நாட்டு மாணவர் களுக்குரிய ரூ.2,152 கோடி நிதியை பறித்து, பிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
* நீதித்துறையில் இட ஒதுக்கீடு: தனிநபர் மசோதா கொண்டு வந்தார் திமுக எம்.பி. வில்சன்.
* திருப்பரங்குன்றத்தில் மத ரீதியான பிரச்சினையை உருவாக்க பாஜக முயற்சி: திமுக கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங்-குக்கு கல்தா; வன்முறையை தூண்டும் வகையில் பைரன் சிங் பேசிய ஒலிப்பதிவு குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மணிப்பூர் முதலமைச்சர் பதவியில் இருந்து பைரன் சிங் விலகிட பாஜக தலைமை கட்டளை.

* பைரன் சிங் பதவி விலகல் போதாது; பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும். வன்முறைக் காடாகத் திகழும் அம்மாநிலத்தை சரி செய்திடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், காங்கிரஸ் வலியுறுத்தல்.

* ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மோடி அரசின் திட்டம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதை நோக்கி நாட்டை நகர்த்தும். மாநில உரிமைகளை மோடி அரசு பறிக்கிறது, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அரசமைப்புச் சட்டம், ஜனநாயகத்தை பலவீனப் படுத்த ஒன்றிய அரசு அனைத்தையும் செய்கிறது, பிரியங்கா காந்தி, எம்.பி. கண்டனம்.

டெக்கான் ஹெரால்ட்:

* மணமகன் கடன் அதிகம் வாங்கி உள்ளார்; நிதி ரீதியாக நிலையானவர் அல்ல. வங்கிக் கடன் பெறுவதற்கான சிபில் (CIBIL) மதிப்பெண் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, திருமணத்தை ரத்து செய்தனர் மணமகள் குடும்பத்தினர். இந்த சம்பவம் மகாராட்டிரா முர்திசாபூரில் நடந்துள்ளது.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *