பெரியார் விடுக்கும் வினா! (1562)

1 Min Read

யார் ஒருவர் மக்கள் நன்மைக்குப் பாடுபடுபவராகவும், ஒழுக்கத்தில் சிறந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டும் விளங்குகிறாரோ அவர் மற்ற மக்கள் யாவரும் அப்பண்புகளைப் பின்பற்றுவதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அப்பேர்பட்டவரை மக்கள் உணரும்படிச் செய்ய வேண்டும். அவரின் உயரிய பண்புகளையும், சேவைகளையும் மற்ற மக்களும் பின்பற்றி நடக்கும் வண்ணம் செய்ய வேண்டும். அதற்கென்று அவரின் குணங்களை மக்கள் பார்த்துத் தமது வாழ்க்கையில் பின்பற்றி வந்த தகாத காரியங்களை விட்டொழித்துத் திருந்தி வாழ வேண்டும். அதற்காக இவரைப் பார்த்தவுடன் அவரின் உயர்ந்த பண்புகள் யாவும் மனதில் உதித்து அதனைப் பின்பற்றச் செய்ய வேண்டும் என்பதற்காகவே படத்திறப்பும், சிலை சிறப்பும் ஆன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டுமேயன்றி வெற்று விளம்பர வெளிச்சத்திற்கு நடத்தப்படலாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *