கொரட்டூர், பிப். 10- “அய்யா வழியில் அறிவுப் பணி தொடர்வோம்” தலைப்பில் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் சார்பில் 459ஆவது வார நிகழ்வாக 9.2.2025 அன்று இரவு 7 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வர வேற்புரையுடன் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலையில், மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு தலைமையில் மேனாள் நகர மன்ற உறுப்பினர் சு.தேவேந்திரகுமார்,வி.சி.க.தொழிலாளர் வி டுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தே.குணாபாரதி ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் இரா.பிச்சைமணி, சுமதி மணி, சரத்குமார், சசிகுமார், சு.சிவகுமார், வழக்குரைஞர் பன்னீர்செல்வம், புஷ்பா பன்னீர்செல்வம், அருள் விழியன், கார்த்தி, தோழர் மார்க்ஸ், கருப்பசாமி, ஆறுமுகம், மணவாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக சி.ஜெயந்தி நன்றி கூறினார்.