திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன? நவாஸ்கனி எம்பி விளக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கடையநல்லூர்,பிப்.10- திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது என்று நவாஸ்கனி எம்பி விளக்கமளித்து உள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்பி பேசியதாவது:

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து முழுமையாக பேச நான் தயாராக இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை எந்த நிலையிலும் எந்த மதத்தினரையும் தவறாக பேசியது கிடையாது. யாரும் புண்படும்படி நடந்தது கிடையாது.
வக்பு வாரிய தலைவர் என்ற முறையில், நடைமுறையில் இருந்ததை தொடருங்கள் என்று மட்டும்தான் கேட்டேன்.

ஆனால், அதைத் திரித்து ஒற்றுமையை குலைக்கும் வகையில் செயல் படுத்துவது, இப்போது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
வக்பு வாரியத்தின் சொத்துகளை சட்டத்தின் மூலமாக அபகரிக்க முயலும் ஒன்றிய அரசின் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதை தோற்கடிப்பதற்கான திட்டங்களை முஸ்லிம் லீக் மேற்கொண்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்கா மலேயே ஒன்றிய அரசு செயல்படுகிறது.

இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தச் சட்டம் நிறை வேற்றப்பட்டால் வக்பு வாரியத்தின் அதிகாரம் பறிபோகும். சொத்துகள் பறிபோகும்.
ஒன்றிய அரசு இசுலா மியர்களை பொருளாதார ரீதியாக பாதிப்படைய செய்வதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருகிறது.
மேலும் சட்ட ரீதியாக இதை எதிர் கொள்ளவும், முஸ்லிம் லீக் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *