18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் சூதாட்டம் விளையாடத் தடை – தமிழ்நாடு அரசு உத்தரவு!

Viduthalai
1 Min Read

சென்னை, பிப். 10- 18 வயதுக்குட் பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை கடுமையாக்கி தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை கடுமையாக்கியது ஆணையம். ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையிலான ஆன் லைன் கேமிங் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் கேமில் பயனர் களை அனுமதிக்கக்கூடாது என உத்தர விடப்பட்டுள்ளது. ஆன்லைனில் விளையாடுபவர்கள் யார் என்பது குறித்து கண்டிப்பாக நிறுவனங்கள் கே.ஒய்.சி. வாங்க வேண்டும்.

ஆதார் மற்றும் ஓடிபி மூலம் ஆய்வு செய்து விளையாட அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டில் நாள், வாரம், மாதம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று விளையாடுபவர்களுக்கு ஆன்லைன் நிறுவனம் தர வேண்டும். Online gaming is addictive in nature என்பது போன்ற எச்சரிக்கையை ஆன்லைன் விளையாட்டு செயலியில் இடம்பெறச் செய்ய வேண்டும். ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *